Home » » ஸ்ரீலங்காவில் நேற்று மட்டும் 17 பேருக்கு கொரோனா: பலருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என தகவல்

ஸ்ரீலங்காவில் நேற்று மட்டும் 17 பேருக்கு கொரோனா: பலருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என தகவல்

கொழும்பில் நேற்று மட்டும் 200 பேர் வரை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீலங்காவில் நேற்றைய தினம் மட்டும் 17 கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டிருந்தனர். அவர்களில் இருவர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகாதவர்கள் எனவும் அவர்களில் ஒருவர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்தவர் மற்றையவர் கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அவர்களுடன் பழகிய சுமார் 200 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட பெண்மணி இருந்த தோட்டம் முடக்கப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த பலர் உணவுப் பொருட்களை பரிமாறியும் , அடிக்கடி கரம்போர்ட் மற்றும் கார்ட்கள் விளையாடியும் இருந்துள்ளதால் பலருக்கு தொற்று பரவியுள்ளதாக கூறப்படுகிறது.



Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |