Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் தீவிரமடையும் கொரோனா வைரஸ் - ஆபத்தான நிலையில் இருவர்


இலங்கையில் இனங்காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளில் இருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் அடையாளம் காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றிரவு மேலும் 2 கொரோனா நோயாளர்களின் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய நேற்றைய தினத்தில் மாத்திரம் இலங்கையில் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.
அடையாளம் காணப்பட்ட இரண்டு நோயாளர்களின் நிலைமை தீவிரமாக உள்ளதாகவும், குறித்த இருவரும் நிமோனியா நிலைமைக்குள்ளாகியுள்ளதாக சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.
இதேவேளை, வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சந்தேகிக்கப்படும் 218 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகத்திற்குரிய நோய் அறிகுறிகளுடன் அதிகமானோர் அங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 88ஆகும் என சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

0 Comments