தற்போது ஏற்பட்டிருக்கும் கொரோனா அச்சுறுத்தலை தடுக்க ஸ்ரீலங்காவில் இராணுவ ஆட்சியமைக்கப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்ச விஜயசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்ரீலங்காவிலும் கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில், வரும் திங்கட் கிழமை வரை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் இந்த அசாதாரண சூழ்நிலையில், இராணுவ ஆட்சி அல்லது சர்வாதிகார ஆட்சி ஒன்று கண்டிப்பாக தேவைப்படுகிறது. இது என்னுடைய தனிப்பட்ட விருப்பம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments: