Home » » ஊரடங்குச்சட்டம் தொடர்பாக அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

ஊரடங்குச்சட்டம் தொடர்பாக அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச்சட்டம் கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (24) காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அன்றைய தினம் மாலை 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.
இதேவேளை ஏனைய மாவட்டங்களில் அமுலில் உள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் திங்கட்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது.
அத்துடன் அன்றைய தினமே மாலை 2 மணிக்கு மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு 24 ஆம் திகதி காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்பட வேண்டும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |