கொரோனா வைரஸ் உருவாகிய சீனாவில் ஏற்பட்ட மரணங்களை விடவும் இத்தாலியில் அதிக மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று மாத்திரம் இந்த தொற்றின் காரணமாக 427 பேர் மரணமாகினர். மேலும் 41ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் சீனாவில் இதுவரையில் இந்த நோயினால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 3245 என்று அறிவிக்கப்பட்டுள்ளது
இந்தநிலையில் சர்வதேச ரீதியாக இந்த நோயினால் மரணமானவர்களின் எண்ணிக்கை 9ஆயிரமாக உயர்ந்துள்ளது. 220 ஆயிரம் பேர் இந்த தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
ஸ்பெயினில் நேற்று மாத்திரம் 209 பேர் இந்த தொற்றினால் மரணமாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments: