அலரி மாளிகையில் இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் அனைத்து முட்டை உற்பத்தியாளருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது, இன்று முதல் முட்டையின் விலை 10 ரூபாயாக விற்பனை செய்ய விலை நிர்ணயம் தொடர்பில் பிரதமரால் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அவ்வாறு பிரதமர் விடுத்த கோரிக்கைக்கு முட்டை உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இன்று முதல் ஒரு முட்டையின் விலை பத்து ரூபாயிற்கு விற்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சதோச மற்றும் ஏனைய விற்பனை நிலையங்கள் ஊடாக குறைந்த விலையில் முட்டைகளை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அரசாங்கம் நிர்ணயித்த விலைக்கு மாறாக அதிக விலையில் முட்டையினை விற்பவர்கள் தொடர்பாக 0372293300 என்ற இலக்கத்திற்கு அழைத்து பொது மக்கள் முறைப்பாடு செய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமையினை கருத்திற் கொண்டு முட்டையின் விலையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதமர், முட்டை உற்பத்தி சங்கத்தின் தலைவர் ஆர். எம். சரத் ரத்நாயக்கவிடம் குறிப்பிட்டார்.
0 comments: