Home » » ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தாலும் சில தேவைகளுக்கு அனுமதி! விபரத்தை வெளியிட்டார் அமைச்சர்

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தாலும் சில தேவைகளுக்கு அனுமதி! விபரத்தை வெளியிட்டார் அமைச்சர்

நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தாலும், அத்தியாவசிய சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சம் காரணமாக இன்றிலிருந்து 23ஆம் திகதி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 6 மணிக்கு அமுலாகும் ஊரடங்குசட்டமானது எதிர்வரும் 23ஆம் திகதி காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பொது மக்களின் அத்தியவசிய தேவைகள் பாதிக்கப்படும் என்கிற அச்சம் ஏற்பட்டிருந்தது.
இது தொடர்பில் தற்போது தகவல் வெளியிட்டுள்ள அமைச்சர், மருந்து, உணவு உட்பட அத்தியாவசிய சேவைகளை முன்னெடுத்து செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். 
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |