Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொரோனா தொடர்பாக மக்கள் தேவையற்ற பீதியடைய தேவையில்லை! அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்


உலகம் பூராகவும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொடர்பாக மக்கள் தேவையற்ற பீதியடைய தேவையில்லை என அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டீ.எம்.எல்.பண்டாரநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த தேசிய ரீதியில் எடுக்கப்படும் தீர்மானங்களை மாத்திரம் அமுல்படுத்துமாறும், மக்களை திசை திருப்பும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்து கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அம்பாறை மாவட்ட செயலகத்தில் அண்மையில் வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்ததன் பின்னர் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாட்டினுள் தற்போது ஏற்பட்டுள்ள நிலமை தொடர்பாக ஆராயும் கூட்டம் அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றிருந்தது.
தேசிய அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கூறுகையில், தவறான பிரச்சாரங்கள் ஊடாக செயற்பட்டு மக்களை அச்சமடையச் செய்ய வேண்டாம்.
அதேபோல் சமூகத்திலிருந்து இந்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த தேசிய ரீதியில் எடுக்கப்படும் தீர்மானங்களை மாத்திரம் அமுல்படுத்துமாறும் வர்த்தகர்கள் தாம் நினைத்தவாறு வர்த்தக நிலையங்களை மூட வேண்டாமென்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான வீ.ஜெகதீசன் மற்றும் அப்துல் லத்தீப், அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அயாஷ கருணாரத்தின, மாவட்டத்தின் பொலிஸ் உயரதிகாரிகள், 24ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி ஜே.சீ.கமகே, அம்பாறை வைத்தியசாலைப் பணிப்பாளர் உபுல் விஜேநாயக்க, வர்த்தக சங்க பிரதிநிதிகள் சுகாதார உயர் அதிகாரிகள் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





Post a Comment

0 Comments