Home » » அம்பியூலன்ஸ் வாகனம் விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

அம்பியூலன்ஸ் வாகனம் விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.


குருணாகலை - கொக்கரெல்ல
பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டை
இழந்த அம்பியூலன்ஸ் வாகனம் விபத்துக்குள்ளாகியதில் ஒருவர்
 உயிரிழந்துள்ளதுடன் ,
மேலும் ஒருவர்
காயமடைந்துள்ளார்.

கொக்கரல்ல பொலிஸ்
பிரிவிற்குட்பட்ட
குருணாகலை - தம்புள்ளை
வீதியில் இன்று
சனிக்கிழமை அதிகாலை 1.45 மணியளவில் கொக்கரல்ல
 வைத்தியசாலைக்கு சொந்தமான அம்புலன்ஸ் வாகனம் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இதன்போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்துள்ள அம்பியூலன்ஸ்
வண்டி வீதியை விட்டுச்சென்று , தூண் ஒன்றில் மோதியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த சாரதியும் சாரதியின் உதவியாளரும்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சாரதி
உயிரிழந்துள்ளார்.

மெதகம-தெஹியத்தக்கண்டிய பகுதியைச்சேர்ந்த 46 வயதுடைய
ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த சாரதியின்
உதவியாளர் பொல்கொல்ல வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று
வருகின்றார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கரல்ல
பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |