Home » » இலங்கையில் கொரோனாவிலிருந்து எழுவரை காப்பாற்றிய மருத்துவகுழாம்

இலங்கையில் கொரோனாவிலிருந்து எழுவரை காப்பாற்றிய மருத்துவகுழாம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியவர்களில் மேலும் நால்வர் குணமடைந்துள்ளனர்.
இந்த தகவலை சற்றுமுன்னர் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி ஐ டி எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நால்வரும் கொரோனாவிலிருந்து குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.
அதன்படி, சீனப் பெண் உட்பட ஏழு பேர் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளனர்.
மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளரின் தகவலின்படி நான்கு பேரும் ஆண்கள் என்று கூறினார்.
இதேவேளை மேற்படி மருத்துவமனையில் மூவர் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் கடந்த 36 மணித்தியாங்களில் எந்தவொரு நபரும் கொரோனா தொற்று இலக்காகவில்லை.
இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்கள் 102 பேர் என கண்டறியப்பட்டுள்ளனர்.
Tags : #Sri Lanka
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |