ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கண்டி, பலகொல்ல பகுதியில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டிலேயே இன்றைய தினம் கைதாகியுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து பலகொல்ல, மஹவத்த பகுதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போதே குறித்த பெண் வசமாக சிக்கியுள்ளதாக தெரியவருகிறது.
சந்தேகநபரான பெண் கைது செய்யப்பட்ட இடத்திலிருந்து 26 மதுபான போத்தல்களை பல்லேகல பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட பெண் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
0 Comments