Home » » மட்டக்களப்பு தற்கொலை குண்டுத்தாக்குலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது !!!!

மட்டக்களப்பு தற்கொலை குண்டுத்தாக்குலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது !!!!

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்

2ம் இணைப்பு 


உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடம் ஏப்ரல் 21ம் திகதி, மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தியவரை, கைதானவரே வழிநடத்தியதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
மவுண்ட் லவனியாவை வசிப்பிடமாக கொண்டவரே கைதாகியுள்ளார்.


கடந்த வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் வெடிகுண்டு தாக்குதலை நடத்திய பயங்கரவாதியை அழைத்துச் சென்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை விரைவுபடுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தல் விடுத்திருந்த நிலையில் குறித்த நபர் கல்கிசை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலை நடத்தியவருக்கு போக்குவரத்து உதவிகளை இவர் செய்ததாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |