Home » » வடக்கு உட்பட8 மாகாணங்களுக்கு வெள்ளிக்கிழமை வரை நீடிக்கப்பட்டது ஊரடங்குச்சட்டம்

வடக்கு உட்பட8 மாகாணங்களுக்கு வெள்ளிக்கிழமை வரை நீடிக்கப்பட்டது ஊரடங்குச்சட்டம்

கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.
பின்னர், பிற்பகல் 12.00 மணிக்கு குறித்த பிரதேசங்களுக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை காலை 6 மணிவரையில் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஏனைய பிரதேசங்களுக்கு இன்று காலை தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.
எதிர்வரும் 26 ஆம் திகதி காலை 6 மணி வரை இந்த ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |