Home » » வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்காக அரசாங்கம் எடுத்த முயற்சிக்கு வெற்றி! தொடர்பு கொண்ட 17000 பேர்

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்காக அரசாங்கம் எடுத்த முயற்சிக்கு வெற்றி! தொடர்பு கொண்ட 17000 பேர்


இலங்கையின் வெளியுறவு அமைச்சு விடுத்தவேண்டுகோளை அடுத்து வெளிநாடுகளில் உள்ள 17,000 இலங்கையர்கள் தம்மை பதிவு செய்து கொண்டனர்.
அவசர தேவைகளின் நிமித்தம் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தம்மை பதிவு செய்துக்கொள்ளவேண்டும் என்று வெளியுறவு அமைச்சு நேற்று முன்தினம் இணையம் ஒன்றை அறிமுகம் செய்தது.
இதில் 6773பேர் மத்தியகிழக்கில் இருந்தும் ஐரோப்பாவில் இருந்து 1892 பேரும் தென்னாசியாவில் இந்த 1028பேரும் வடமெரிக்க மற்றும் ஏனைய நாடுகளில் இருந்த 6000 பேரும் தம்மை இதில் பதிவு செய்துள்ளனர்.
வெளிநாடுகிளல் உள்ள இலங்கையர்கள் தம்மை பதிவுசெய்து கொள்வதற்காக www.contactsrilanka.mfa.gov.lk என்ற முகவரியை அறிமுகம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

you may like this?
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |