கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் 103 பேர் நாட்டின் 15 வைத்திசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அதில் 35 பேர் தேசிய தொற்று நோயியல் நிறுவகத்தில் (ஐ.டி.எச்) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர 16 பேர் குருநாகல் போதனா வைத்தியசாலையிலும் 13 பேர் கம்பஹா வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 5 பேர் தொடர்ந்தும் ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, தென்கொரியா, இத்தாலி மற்றும் ஈரான் நாடுகளில் இருந்து இதுவரை நாடு திரும்பிய 1, 631 பேர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments: