Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளுக்கும் தலா 1 மில்லியன்; நிவாரண பொருட்களை விநியோகிக்க மஹிந்த நடவடிக்கை!


கிராம அலுவலர் பிரிவொன்றுக்கு ரூபா 10 இலட்சம் படி அவசர உதவி தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா விடுத்த வேண்டுகோளை அடுத்து இந்த நடவடிக்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சவால் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாளாந்த உழைப்பாளிகளுக்கு இது பெரும் உதவியாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments