Home » » இளைஞர் பாராளுமன்றத் தேர்தல்

இளைஞர் பாராளுமன்றத் தேர்தல்

( அஸ்ஹர் இப்றாஹிம்)
இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் இன்று(2020.02.22) நாடு தளுவிய ரீதியல் சனிக்கிழமை நடைபெறுகிறது.
 கல்முனைப் பிரதேச செயலகத்தில் கல்முஐன பிரதுச செயலகத்திற்கான இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நிலையப் பொறுப்பதிகாரியான பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர்  தலைமையில் இன்று  காலை 8.30 மணிக்கு ஆரம்பித்து வாக்குப் பதிவு ஆரம்பித்துவைக்கப்பட்டது.
...இம்முறை  முதற்  தடவையா Online Voting System முறையில் இத் தேரதல் நடைபெறுகின்றமை விசேட அம்சமாகும்..

தொடர்புபட்ட செய்தி 

இளைஞர் பாராளுமன்ற தேர்தல் இன்று : அம்பாறையில்  வாக்களிப்பு சுமூகம் !!

நூருல் ஹுதா உமர்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் பாராளுமன்ற தேர்தல் இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பித்து சுமூகமாக நடைபெற்று வருகிறது. 

20 உறுப்பினர்களை அம்பாறை மாவட்டத்தில் இருந்து தெரிவுசெய்ய அம்பாறை மாவட்ட சகல பிரதேச செயலகத்திலும் தேர்தல் நடைபெற்று வருகிறது.  மொத்தமாக நாடு தழுவி யதாக 354 உறுப்பினர்களை தெரிவு செய்ய இடம்பெற்றுவரும் இத்தேர்தல் கணனிமயப்படுத்தப்பட்டு தேர்தல் ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. 

சாய்ந்தமருது, காரைதீவு, கல்முனை பிரதேச செயலக வாக்கு சாவடிகளில் வேட்பாளர்களும், வாக்காளர்களும் உற்சாகமாக வாக்களித்து வருவதுடன் இலங்கை பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |