Home » » தாய்லாந்து துப்பாக்கிச்சூடு – உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

தாய்லாந்து துப்பாக்கிச்சூடு – உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

தாய்லாந்தில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் இராணுவச் சிப்பாய் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது.

ஜக்ரபந்த் தொம்மா என்ற அந்த இராணுவச் சிப்பாய், கோராத் நகரில் உள்ள இராணுவ வீரா்கள் தங்குமிடத்தில் முதலில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினார். இதில் இராணுவ வீரா் உட்பட மூவா் கொல்லப்பட்டனா்.

இதனையடுத்து ரேர்மினல் 21 ஷொப்பிங் (Terminal 21 shopping centre) என்ற வணிக வளாகத்துக்கு காரில் சென்ற அவர், உள் நுழைந்து சரமாரியாக துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டார்.

இந்தத் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அத்தோடு 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதனையடுத்து சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிஸார், இராணுவத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து, அந்த வணிக வளாகத்தை சுற்றிவளைத்து, அதன் தரைத் தளத்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனா். அதன் பின்னர் வணிக வளாகத்திலிருந்து 12 போ் வரை மீட்கப்பட்டுள்ளனா்.

முன்னதாக ஜக்ரபந்த் தொம்மா தனது தாக்குதல் நடவடிக்கையை முகநூலில் நேரலை செய்துள்ளார். தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக சந்தேகத்துக்கு இடமான வகையில் சில புகைப்படங்களையும், பதிவுகளையும் அவா் அதில் பதிவிட்டுள்ளாரென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எனினும், தாக்குதல் நடத்திய இராணுவச் சிப்பாய் ஜக்ரபந்த் தொம்மா எங்கு உள்ளார்? அவா் சுட்டுக்கொல்லப்பட்டாரா? அல்லது, வணிக வளாகத்திலிருந்து தப்பிவிட்டாரா? என்பது தொடா்பாக எந்தவொரு தகவலையும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |