சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 8 வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விஷேட சுற்றிவளைப்பு பிரிவினர் இன்று கைது செய்துள்ளனர்.
பம்பலபிட்டி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த அவர்களை இவ்வாறு கைது செய்ததாக குறிப்பிடப்படுகின்றது.
இதன்போது இந்த பாலியல் தொழில் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்த சீன பெண்ணும் சிக்கியதாகவும் குடிவரவு குடியகல்வு திணைக்கம் தெரிவித்துள்ளது.
கைதான 8 பெண்களும், மிரிஹான விஷேட தடுப்பு மையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளின் பின்னர் அவர்களை நாடு கடத்த எதிர்ப்பார்ப்பதாகவும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
0 Comments