Advertisement

Responsive Advertisement

டி20 சர்வதேச போட்டிக்கான புதிய விதிமுறையை வெளியிட்டது ஐ.சி.சி !!


சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி ‘டை’யில் முடிந்தால் சூப்பர் ஓவரில் கடைபிடிக்கப்படும் புதிய விதிமுறையை ஐசிசி வெளியிட்டுள்ளது.

இதனால் ஐசிசி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. ஆகவே தற்போது விதிமுறைகளை மாற்றியுள்ளது. டி20-க்கும் மாற்றியுள்ளது. டி20-க்கான புதிய விதிமுறை தென்ஆப்பிரிக்கா – இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா தொடரில் அறிமுகப்படுத்த இருக்கிறது.

1. போட்டி ‘டை’யில் முடிந்தால் சூப்பர் ஓவர் விளையாடப்படும். சூப்பர் ஓவரும் ‘டை’ ஆனால், தொடர்ச்சியாக முடிவு கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் விளையாடப்படும். ஒரு ஓவருக்கு 6 பந்துகள் வீசப்படும்.

2. இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்தால் ஒரு அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வரும்
3. ஒவ்வொரு அணிக்கும் தலா ஒரு ‘ரிவியூ’ வாய்ப்பு வழங்கப்படும்.
4. சூப்பர் ஓவர் மழை போன்ற காரணத்தினால் நீண்ட நேரமாக நடைபெறவில்லை என்றால் போட்டி கைவிடப்படும்.
5. போட்டியில் 2-வது பேட்டிங் செய்த அணி சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்யும்.
6. முதலில் பீல்டிங் செய்யும் அணி பந்தை தேர்வு செய்யலாம். 2-வது பீல்டிங் செய்யும் அணி அதே பந்தை தேர்வு செய்யலாம். பந்தை மாற்ற வேண்டும் என்று விரும்பினால், போட்டி நடைபெறும் சூழ்நிலை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

7. பீல்டர்கள் கட்டுப்பாடு போட்டியின் கடைசி ஓவரில் எப்படி இருந்ததோ, அதே போன்று இருக்கும்.
8. சூப்பர் ஓவருக்கான இடைவேளை ஐந்து நிமிடங்கள்.

Post a Comment

0 Comments