Home » » சாய்ந்தமருது தஹ்வா இஸ்லாமிய கலா பீடத்தின் பத்தாவது பட்டமளிப்பு விழா

சாய்ந்தமருது தஹ்வா இஸ்லாமிய கலா பீடத்தின் பத்தாவது பட்டமளிப்பு விழா

( அஸ்ஹர் இப்றாஹிம்)

சாய்ந்தமருது  தஹ்வா இஸ்லாமிய கலா பீடத்தின் பத்தாவது பட்டமளிப்பு விழாவும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் பெப்ரவரி மாதம் 2 ஆம்  திகதி   ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு  சாய்ந்தமருது அல் ஹிலால்  வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது.
கலா பீடத்தின் தலைவர் அல்ஹாஜ் யு.எல்.எம்.காசிம் மௌலவி அவர்களின்  தலைமையில் இடம்பெறவுள்ள மேற்படி நிகழ்வில் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதியும் , கிழக்கு மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியுமான அல்ஹாஜ் என்.எம். அப்துல்லாஹ் பிரதம அதிதியாகவும் , அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரி அதிபர் அல் ஹாஜ் ஏ.எல்.எம்.அஷ்ரப் முதன்மைச்சொற்பொழிவாளராகவும் , மதுரங்குழி மேர்ஸி கல்வி வளாக பணிப்பாளர்  ஏ பௌசுல் ரகுமான் , மதுரங்குழி மேர்ஸி லங்கா நிறுவனத்தின்  நிகழ்ச்சி திட்டப் பணிப்பாளர் எம்..ஆர்.எம்.முனாஸ் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் ,  சாய்ந்தமருது- மாளிகைக்காடு  ஜும்ஆப் பெரியபள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவர் அல்ஹாஜ் வை.எம் ஹனிபா, சாய்ந்தமருது - மாளிகைக்காடு  ஜம்மியத்துல் உலமா தலைவரும் ,  அட்டாளைச்சேனை கிழக்கு அரபுக்கல்லூரியின் விரிவுரையாளருமான அல்ஹாஜ் .எம் .எம் சலீம் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |