Home » » கனடாவில் துப்பாக்கி சூடு - பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு

கனடாவில் துப்பாக்கி சூடு - பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு


கனடாவில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒட்டாவா, ஒன்டாரியோ - நகரத்தின் மத்திய பகுதியில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
கனேடிய நேரப்படி இன்றைய தினம் காலை 7.30 மணியளவில் பல முறை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது அங்கு பலர் காயமடைந்ததுடன் மூன்று பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக துணை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
எனினும் என்ன காரணத்திற்காக துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பில் கண்டுபிடிக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |