மட்டக்களப்பு – தம்பலாவத்தை பகுதியில் உடல் வ லிக்கு தடவும் தைலத்தை அருந்தி ஒன்றரை வயது சிறுவனொருவன் நேற்று உ யிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 1ம் திகதி பெரியவர்கள் உடல் வ லிக்கு பயன்படுத்தும் தைலத்தை அருந்தியதால் ம யக்கமுற்ற நிலையில் குறித்த சிறுவன் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலையில் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உ யிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு – தம்பலாவத்தை பிரதேசத்தை சேர்ந்த ஹரிகரன் துசேன் எனும் 1 வயதும் 8 மாதங்களையும் உடைய சிறுவனே இவ்வாறு உ யிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவனின் தாயார் சு கயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், உறவினர்களின் பராமரிப்பில் இருந்த சந்தர்பத்திலேயே இத்துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
0 Comments