Home » » தனியார் வகுப்புக்களை நடாத்தும் ஆசிரியர்களுக்கு ம.தெ.எ. பற்று பிரதேச சபையின் வேண்டுகோள்

தனியார் வகுப்புக்களை நடாத்தும் ஆசிரியர்களுக்கு ம.தெ.எ. பற்று பிரதேச சபையின் வேண்டுகோள்

ம.தெ.எ. பற்று பிரதேச சபை அமர்வில் தீர்மான இலக்கம் 184 ல் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதும். எமது பிரதேச சபை எல்லைக்குள் நாடாத்தப்படுகின்ற பிரத்தியேக தனியார் வகுப்பு உரிமையாளர்களுடன் நடாத்தப்பட்ட விசேட கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கும் அமைவாக பாடசாலை விடுமுறை காலங்களில் மாணவர்களின் நன்மை கருதி அவர்களின் உடல் உள நலனை முன்னிட்டு குறிப்பிட்ட சில நாட்களுக்கு பிரத்தியேக தனியார் வகுப்புக்க ளை நடாத்த தடை விதிப்பதென்ற தீர்மானத்துக்கமைய தற்போது வழங்கப்பட்டுள்ள மூண்றாந்தவணை விடுமுறை காலத்தில் காலநிலையை கருத்தில் கொண்டும் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டும் எதிர்வரும் 10.12.2019 திகதி முதல் 31.12.2019 திகதி வரை சகல பிரத்தியேக தனியார் வகுப்புக்கள் நடாத்துவதற்கும் ம.தெ.எ.பற்று பிரதேச சபையினால் தடைவிதிக்கப்படுவதாக கௌரவ தவிசாளர் திரு. யோகநாதன் அவர்களினால் அறிவிக்கப்பட்டுள்ளது.இது சம்பந்தமாக பதிவு செய்யப்பட்ட தனியார் கல்வி நிலையங்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
குறிப்பு:- இவ்வறிவித்தலை மீறும் சகல தனியார் கல்வி நிறுவனங்களுக்கெதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |