குறித்த இரு பள்ளிவாசல்கள் மீதும் கற்கள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இதன்போது குறித்த பள்ளிவாசல்களின் யன்னல் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு இடம்பெற்ற கடந்த 16ஆம் திகதி இரவு காலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலாபிட்டிய பள்ளிவாசல் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, இரத்தினபுரி – நிவித்திகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெட்டனிகேவத்த பகுதியில் நேற்று பள்ளிவாசல் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து நிவித்திகல பொலிஸார் விஷேட விசாரணைகளை ஆரம்பித்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரைக் கைது செய்துள்ளனர்.
மேலும் பிரதேசத்தின் CCTV காணொளிகளை மையப்படுத்தி முன்னெடுத்த விஷேட விசாரணைகளில் முச்சக்கர வண்டியில் அவ்விருவரும் வந்து தாக்குதல் நடத்துவது தெரியவந்துள்ளதாகவும் அதன் அடிப்படையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த இரு சம்பவங்கள் குறித்தும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments: