Home » » காலி மற்றும் இரத்தினபுரியில் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்

காலி மற்றும் இரத்தினபுரியில் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்


காலி – தலா­பிட்­டிய மற்றும் இரத்­தி­ன­புரி நிவித்­தி­கல – கெட்ட­னி­கே­வத்த பள்ளிவாசல்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இரு பள்­ளி­வா­சல்கள் மீதும் கற்கள் கொண்டு தாக்குதல் நடத்­தப்பட்­டுள்­ள­தா­கவும் இதன்­போது குறித்த பள்ளிவா­சல்­களின் யன்னல் கண்­ணா­டிகள் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.

ஜனா­தி­பதித் தேர்தல் வாக்­க­ளிப்பு இடம்­பெற்ற கடந்த 16ஆம் திகதி இரவு காலி பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட தலா­பிட்­டிய பள்­ளி­வாசல் மீது கல்­வீச்சு தாக்­குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, இரத்­தி­ன­புரி – நிவித்­தி­கல பொலிஸ் பிரிவுக்குட்­பட்ட கெட்­ட­னி­கே­வத்த பகுதியில் நேற்று பள்ளிவாசல் மீது கல்­வீச்சு தாக்­குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்­பவம் குறித்து நிவித்­தி­கல பொலிஸார் விஷேட விசாரணை­களை ஆரம்­பித்த நிலையில் சம்­ப­வத்­துடன் தொடர்புடைய இரு­வரைக் கைது செய்­துள்­ளனர்.

மேலும் பிர­தே­சத்தின் CCTV காணொ­ளி­களை மைய­ப்ப­டுத்தி முன்­னெ­டுத்த விஷேட விசா­ர­ணை­களில் முச்­சக்­கர வண்டியில் அவ்­வி­ரு­வரும் வந்து தாக்­குதல் நடத்­து­வது தெரியவந்துள்ளதாகவும் அதன் அடிப்படையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த இரு சம்பவங்கள் குறித்தும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |