உலகில் எவ்வித செயற்பாடும் இல்லாமல் சம்பளம் எடுக்கும் ஒரே பதவி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியாகும். மூன்று மாதத்துக்கு ஒரு முறை நாடாளுமன்றத்துக்கு சென்றால் போதும். வருடத்துக்கு நான்கு நாட்கள். ஐந்து வருடத்துக்கும் 20 நாட்கள் நாடாளுமன்றம் சென்று வந்தால் போதுமானது. அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என தேசிய மக்கள் சக்தி அமைப்பின் ஜனாதிபதி வேட்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மாத்தறைப் பிரதேசத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்
நாட்டு மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டு வரும் உறுப்பினர் தனது கட்சியை மாற்றிக் கொண்டால், அவரது உறுப்பினர் பதவி மறுநாள் ரத்தாகும் விதத்தில் சட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
அத்துடன் எவ்வித செயற்பாடும் இல்லாமல் ஐந்து வருடம் நிறைவடைய அவர்களுக்கு ஓய்வூதியமும் வழங்கப்படுகிறது.
இதனாலேயே நாம் அரசாங்கத்துக்கு வந்தவுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குள்ள ஓய்வூதியத்தை இல்லாமல் செய்வோம் என்று தீர்மானித்துள்ளோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments