கொழும்பு - செதம் வீதியில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மற்றும் 47 மோட்டார் சைக்கிள் என்பன எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீப்பரவலுக்கான காரணம் வெளிவராத நிலையில் பொலஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
எனினும் நீண்ட போராட்டத்தின் பின் தீயை கட்டுப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
0 comments: