Home » » அதிபர், ஆசிரியர் பணி பகிஸ்கரிப்பு 8 ஆம் திகதி நடைபெறாது: - ஜோசப் ஸ்ராலின் -

அதிபர், ஆசிரியர் பணி பகிஸ்கரிப்பு 8 ஆம் திகதி நடைபெறாது: - ஜோசப் ஸ்ராலின் -

எதிர்வரும் 8 ஆம் திகதி – அதிபர், ஆசிரியர் தொழிங்சங்கங்களினால் மேற்கொள்ளப்படவிருந்த பணிப்பகிஸ்கரிப்பு, ஜனாதிபதித் தேர்தல் முடிவுறும் வரையில் பிற்போடப்பட்டுள்ளதாக -தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று 05.10.2019 அமைச்சரவை கூடியிருந்த போதும் - சம்பள ஆணைக்குழுவினரால் இதுவரை அறிக்கை சமர்ப்பிக்கப்படாமையாலேயே முடிவினை மேற்கொள்ள முடியாது போனதாக கல்வியமைச்சரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் - சம்பள ஆணைக்குழுவினரின் தீர்மானம் ஆணைக்குழு உறுப்பினர்கள் ஒன்றாகக் கூடியே எடுக்கமுடியும் எனவும் -  எதிர்வரும் 14 ஆம் திகதியே சம்பள ஆணைக்குழு கூடவுள்ளதால்- அந்த அறிக்கையைப் பெற்றுக்கொள்ள முடிந்திருக்கவில்லை என்வும் கல்வியமைச்சரால் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் - ஏற்கனவே தீர்மானித்தபடி எதிர்வரும் 8 ஆம் திகதி – பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடுவதற்கு அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தீர்மானித்திருந்த போது - தேர்தல்கள் ஆணையாளர் தொழிற்சங்க உறுப்பினர்களை அழைத்து கலந்துரையாடியிருந்தார்.

இதன்போது – தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் - தொழிற்சங்கப் போராட்டம் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை செலுத்தும். அதேவேளை – தேர்தல் காலங்களில் - புதிய தீர்மானங்களை அரசாங்கத்தால் எடுப்பதும் வாக்குறுதிகளை வழங்குவதும் தேர்தல் விதிமுறைகளை மீறும் செயற்பாடாகவே அமையும். இதனால் - அரசாங்கம் எடுக்கும் முடிவுகளிலும் தேர்தல் திணைக்களம் தலையிடவேண்டிய நிலை ஏற்படும்.
அதுமட்டுமல்லாமல் - தேர்தல் கடமைகளில் - அதிபர், ஆசிரியர்களும் ஈடுபடவுள்ள நிலையில் - அவர்களுக்கான தேர்தல் வகுப்புகளும் நடைபெறவுள்ள நிலையில் - தேர்தல் செயற்பாடுகளையும் தொழிற்சங்கப்போராட்டம் பாதிப்படையச் செய்யும். இதனால் - இப்போராட்டத்தை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நடத்தவேண்டாம் என தேர்தல் ஆணையாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் - அதிபர், ஆசிரியர் தொடர்பான சம்பளப் பிரச்சினை தொடர்பாக – விரைவாக பொருத்தமான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சம்பள ஆணைக்குழுவுக்கும், கல்வியமைச்சுக்கும் தான் எழுத்துமூலம் கோரிக்கையை முன்வைப்பதாகவும் அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கு – தேர்தல் ஆணையாளர் உறுதியளித்துள்ளதாகவும் - நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் பின்னர்  - தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும்  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |