Home » » காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள விசேட எச்சரிக்கை!

காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள விசேட எச்சரிக்கை!

இலங்கையின் பல பகுதிகளில் இன்றிரவு அடைமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, ஊவா, வடமேல் மற்றும் வட மாகாணத்திலும் அனுராரபுரத்திலும் மழையுடனான காலநிலை எதிர்பார்க்கப்படுகின்றது.
அடைமழை பெய்யும் போது இடி, மின்னலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மழையின் போது மணிக்கு 70 - 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
மின்னலினால் ஏற்பட கூடிய ஆபத்துக்களை தவிர்த்துக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது மக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |