Home » » காரைதீவைச்சேர்ந்த வெஸ்லி பாடசாலை மாணவி மின்னொழுக்கினால் எரிந்து மரணம்!!!

காரைதீவைச்சேர்ந்த வெஸ்லி பாடசாலை மாணவி மின்னொழுக்கினால் எரிந்து மரணம்!!!


அம்பாரை மாவட்டம் காரைதீவைச்சேர்ந்த வெஸ்லி பாடசாலை உயர்தர கணிதபிரிவு மாணவியான அக்சயா(17வயது) இன்று காலை கல்முனையிற்கு பிரத்தியோக வகுப்பிற்கு செல்வதற்கு நீராவிட்டு தயராகிய நேரம் வீட்டில் ஏற்பட்ட மின்னொழுக்கு விபத்திற்குட்பட்டு சடுதியாக எரிகாயத்துடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நேரம் வீட்டில் பெற்றோர் இல்லாத நேரம் இடம்பெற்றுள்ளது .சுற்றியுள்ள மக்கள் ஓடிவந்த போதும் காப்பாற்ற முடியவில்லை.
இன்றைய தினம் காரைதீவிலிருந்து பெருமளவான இந்துமத அடியார்கள் மண்டூர் முருகனை தர்சிக்க மண்டூர் கிராமத்தை நோக்கி பாதயாத்திரை அதிகாலை சென்ற நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றது பல உறவினர் இடைநடுவில் புறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,
மாணவியின் உயிரிழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகட்டும் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |