கல்முனை - சாய்ந்தமருது பகுதியின் எல்லையில் அமைந்துள்ள மயானம் மற்றும் தனியார் மரக்காலைகளில் ஸ்கானர் இயந்திரங்களை பயன்படுத்தி நேற்று மாலை நான்கு மணி முதல் இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதன்போது இரு ட்ரக் வண்டிகளில் வருகை தந்த சுமார் 50 இற்கும் அதிகமான இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குறித்த தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் குறித்த பகுதியிலுள்ள சில வீதிகள் இராணுவத்தினரால் மறிக்கப்பட்டதுடன், செய்தி சேகரிப்பிற்காக சென்ற ஊடகவியலாளர்கள் இராணுவத்தினரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.
0 Comments