மட்டக்களப்பு, புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கம், மாணவர்கள், ஆசிரியர், பெற்றோர், சமூகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த ‘சமூக விழிப்புணர்வு நடை பவனி’ இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது.
பாடசாலையில் இருந்த ஆரம்பமான இவ் நடை பவனியில் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், மாணவர்கள் உற்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
இவ் நடை பவனி புனித மிக்கேல் கல்லூரியின் பாரம்பரிய பெருமையை காட்டுவதாகவும், மாணவர்களது ஆற்றல்கள், திறன்கள், சாதனைகளை புலப்படுத்துவதாகவும் சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளை தடுக்க கோருவதாகவும் காணப்பட்டது.
கல்லூரியின் பண்பை சமூகத்தில் உயர்த்தி வைக்கவும் ஒற்றுமையே நம் பலம் என்பதை கல்லூரி மாணவர், பழைய மாணவர், ஆசிரியர், பெற்றோர் மத்தியில் உணர்த்தும் முகமாக ஏற்பாடு செய்த இந் நிகழ்வினுடாக சாதனை படைத்த மாணவர்களது வெற்றிக் கிண்ணங்களும் எடுத்துச் செல்லப்பட்டன.
0 Comments