அமைச்சர் சஜித் பிரேமதாஸ கட்சியின் சார்பில் போட்டியிடுவார் என அதிகளவில் பேசப்பட்டாலும், அதனை கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்கவினால் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என தெரிய வருகிறது.
தேவை ஏற்பட்டால் சுயேட்சையாக ஜனாதிபதி வேட்பாளராக சஜித்தை களமிறங்குமாறு, சஜித்திற்கு நெருக்கமான சிலரிடம் பிரதமர் அறிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தனிக்கட்சியில் தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியம் சஜித்திற்கு இருந்தால், கட்சியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அருண டி சொய்ஸாவின் கட்சியில் சந்தர்ப்பம் உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
0 comments: