இந்த விடயத்திற்கான பொறுப்பை கன்னியா வெந்நீர் ஊற்று பிள்ளையார் ஆலய காணியின் உரிமையாளர் கணேஸ் கோகில றமணி ஒப்படைத்திருந்தார்.
எனினும் இந்த வழக்கில் இரு மாதங்களாக எவ்வித முன்னேற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை.
எவ்வாறாயினும் இந்த வழக்குடன் தொடர்புடைய குழுவிலிருந்த ஏனைய சட்டத்தரணிகள் சிலர் அரசியல்வாதிகள் வேண்டாம். அது இந்த வழக்கிற்கு நல்லதல்ல என சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் இந்த வழக்கினை கையாள்வதற்கான உரித்தை, கடித வடிவில் தனது ஒப்பத்துடன் ஜனாதிபதி சட்டத்தரணியான சுமந்திரனிடம் கொடுத்துள்ளார் கோகில றமணி.
இதன் பிரகாரம் இவ்வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் மனுதாரர் தரப்பில், சட்டத்தரணி செல்வி உதயகுமார் பிராஷாந்தினியின் அறிவுறுத்தலின் படி ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
இரண்டு மாதங்கள் நீடித்த சர்ச்சைக்கு இரு நாட்களில் முதற்கட்ட வெற்றியை பாதிக்கப்பட்ட பெண்மணி கோகில றமணிக்கு பெற்றுக் கொடுத்திருக்கின்றனர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான அணியினர்.
இது தொடர்பில் கோகில றமணி கூறுகையில், தற்போது தான் தனக்கு நீதி கிடைக்கும் என்ற முழுமையான நம்பிக்கை வந்துள்ளதாக குறிப்பிடடுள்ளார்.
0 comments: