ஈஸ்டர் குண்டுவெடிப்பில் பெற்றோரை இழந்த சிறுவர்களுக்கான புலமைப்பரிசில் உதவித்தொகை திட்டமொன்றை அவுஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் கிரேக் பிலிப் ஒன்டார்ச்சி முன்மொழிந்துள்ளார்.
இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த கிரேக், தனது இலங்கை பாரம்பரியத்தைப் பற்றி மிகவும் பெருமிதம் அடைகிறார். தற்போது விக்டோரியன் நாடாளுமன்றத்தில் இலங்கையின் பிரதிநிதியாக உள்ளார்.
அவர் இலங்கை பாரம்பரியத்தை கொண்ட முதல் நாடாளுமன்ற உறுப்பினர், லிபரல் கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர், மற்றும் லிபரல் கட்சியில் ஒரு பதவியை வகித்த முதல் இலங்கையர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது..
0 Comments