Home » » கொழும்பில் ஆசியாவின் ஆச்சரியம்! எதிர்பாரத விதமாக சிக்கிய அபூர்வ காட்சி

கொழும்பில் ஆசியாவின் ஆச்சரியம்! எதிர்பாரத விதமாக சிக்கிய அபூர்வ காட்சி

இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தெற்காசியாவின் மிக உயரமான கட்டடத்தில் மின்னல் தாக்கிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
விரைவில் திறக்கப்படவுள்ள தாமரை கோபுரத்தின் உச்சியில் மின்னல் தாக்கியுள்ளது. இதன்போது எழுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
வேறு விதமாக மின்னல் தாக்கும் புகைப்படங்களை எடுப்பதற்கு கடந்த 4 மாதங்களாக முயற்சிக்கப்பட்டுள்ளது. எனினும் எதிர்பாராத விதமாக இந்த புகைப்படம் கமராவில் சிக்கியுள்ளது.
இலங்கையின் பிரபல புகைப்பட கலைஞர் ஒருவரினால் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
ஆசியாவில் மிகவும் உயரமான கட்டடமாக தாமரை கோபுரம் மாறியுள்ளது. பல பில்லியன் டொலர் பெறுமதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த கட்டடம் விரைவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |