Advertisement

Responsive Advertisement

இராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் சோதனை! மௌலவியின் அறையில் மீட்கப்பட்ட பொருட்கள்

கம்பஹாவில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது இராணுவ சீருடைகள், சிம் அட்டைகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மாகொல பாத்திமா என்ற பிரதேசத்தில் நேற்று திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதிகாலை 5 மணி முதல் காலை 11 மணி வரையிலான 6 மணித்தியாலங்களாக இந்த விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இந்த சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
அந்தப் பகுதியிலுள்ள இரண்டு மாடிக் கட்டடத்தின் இரண்டாவது மாடியில் மௌவி ஒருவர் தங்கியிருந்த அறையில் பல்வேறு பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
முஸ்லிம் பெண்கள் அணியும் புர்காவின் மேற்பகுதிகள், இராணுவ சீருடைக்கு சமமான ஆடைகள், பல்வேறு கையடக்க தொலைபேசி நிறுவனங்களின் 29 சிம் அட்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சுற்றிவளைப்பின் போது குறித்த மௌலவி அந்த அறையில் இருக்கவில்லை. அவரை கைது செய்து விசாரணை மேற்கொள்ள நீதிமன்றத்தின் அனுமதியை பொலிஸார் கோரியுள்ளனர்.

Post a Comment

0 Comments