பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முன் சாட்சியமளிக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க விரும்பம் வெளியிட்டுள்ளதாக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முக்கிய உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, முன்னாள் சட்டம், ஒழுங்கு அமைச்சர்களான சாகல ரத்நாயக்க, ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரும் தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்க விரும்பம் வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்ய பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் நாடாளுமன்ற தெரிவுகுழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவானது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள பலரிடம் சாட்சி மூலங்களைப் பெற்றுள்ளது.
பிரதானமாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா, முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி உள்ளிட்ட பலர் சாட்சியமளித்துள்ளனர்.
அமைச்சரான றிசாட் பதியுதீனிடம் மாத்திரம் இன்னமும் சாட்சியம் பெறப்படவில்லை. இந்நிலையில், அவரும் எதிர்வரும் 26ம் திகதி தெரிவு குழு முன்னிலையில் சாட்சியமளிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், பிரதமர் உள்ளிட்ட சாட்சியம் வழங்க விருப்பம் வெளியிட்டுள்ளவர்களை தெரிவுக்குழுக்கு அழைப்பது தொடர்பில் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை” குறித்த உறுப்பினர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவானது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள பலரிடம் சாட்சி மூலங்களைப் பெற்றுள்ளது.
பிரதானமாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா, முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி உள்ளிட்ட பலர் சாட்சியமளித்துள்ளனர்.
அமைச்சரான றிசாட் பதியுதீனிடம் மாத்திரம் இன்னமும் சாட்சியம் பெறப்படவில்லை. இந்நிலையில், அவரும் எதிர்வரும் 26ம் திகதி தெரிவு குழு முன்னிலையில் சாட்சியமளிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments