தமது கோரிக்கைகளுக்கு முழுமையான தீர்வு கிடைக்காவிடின் மீளவும் தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக ரயில் சாரதிகள் சங்கம் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக மேற்படி சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவிக்கையில்
எமது கோரிக்கைகளை அரசாங்கம் எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவேற்றாவிடின் வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.அத்துடன் கோரிக்கைகள் நிறைவேற்றாப்படின் எதிர்வரும் 27 ஆம் திகதி நள்ளிரவுமுதல் 28 ஆம் திகதி நள்ளிரவு வரை அனைத்து ரயில்வே தொழிற் சங்கங்களும் வேலை நிறுத்தத்தில் குதிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
நிதியமைச்சருடன் தமது சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதற்கான பேச்சு தோல்வியடைந்ததைத் தொடர்து கடந்த வியாழக்கிழமை ரயில்வே தொழிற்சங்ககங்கள் 48 மணிநேர வேலைநிறுத்தத்தில் குதித்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments