சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்வுவதை தடுக்கும் தொழிநுட்ப உதவிகளை வழங்க சீனா முன்வந்துள்ளது.
சமூக ஊடகங்களின் மூலம் தவறான பரப்புரைகளைச் செய்து, தீவிரவாதத்தைப் பரப்பும், நபர்களை கண்டறிவதற்கான தொழில்நுட்ப நிபுணத்துவமோ கருவிகளோ சிறிலங்காவிடம் இல்லை என்று சிறிலங்கா அதிபர் சீனாவிடம் முறையிட்டுள்ளார்.
அதற்குப் பதிலளித்த சீன அதிபர், சிறிலங்காவுக்கு உடனடியாக தேவையான தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும், கருவிகளையும் உடனடியாக வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
இந்த விவகாரங்களில் உதவுவதற்காக சிறிலங்காவுக்கு தொழில்நுட்ப குழுவொன்றை விரைவில் அனுப்பி வைப்பதாகவும் சீன அதிபர் தெரிவித்துள்ளார்.
0 comments: