எனக்கு நடந்தது போன்று இனி எவருக்கும் நடக்கக் கூடாது என்று விடுதலையான முன்னாள் போராளி அஜந்தன் கவலை வெளியிட்டார்.
வவுணதீவில் இரண்டு பொலிஸார் படுகொலை செய்யப்பட்டது தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் போராளியான கதிர்காமத்தம்பி ராசகுமாரன் எனப்படும் அஜந்தன் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றினால் இன்று காலை விடுவிக்கப்பட்டார்.
விடுதலையான அஜந்தன் கருத்து தெரிவிக்கையில்,
எனது கைதால் எனது குடும்பம், எனது பிள்ளைகள் பாதிக்கப்பட்டு விட்டனர்.
அதனை சீர்செய்ய சில காலங்கள் செல்லும். இப்படியான துயர சம்பவங்கள் தமிழ் இளைஞர்களுக்கு நடந்துவிடக் கூடாது என்று அவர் தெரிவித்தார்.
0 comments: