Home » » இராணுவத்தின் யாழ்ப்பாண மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல்தர்ஷன ஹெட்டியாராச்சி போன்ற நல்லிணக்க செயற்பாட்டாளரே புதியதளபதியாக நியமிக்கப்பட வேண்டும் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் பூபாலரட்ணம் கோரிக்கை

இராணுவத்தின் யாழ்ப்பாண மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல்தர்ஷன ஹெட்டியாராச்சி போன்ற நல்லிணக்க செயற்பாட்டாளரே புதியதளபதியாக நியமிக்கப்பட வேண்டும் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் பூபாலரட்ணம் கோரிக்கை




( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி போன்ற நல்லிணக்க செயற்பாட்டாளர் ஒருவரையேஇலங்கை இராணுவத்தின் அடுத்த தளபதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிக்கவேண்டும் என்று காரைதீவு பிரதேச சபையின் உறுப்பினர் ஆறுமுகம் பூபாலரட்ணம் கோரிக்கைவிடுத்து உள்ளா


ர்.
இவரின் காரைதீவு இல்லத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து அரசியல் நடப்புகள் தொடர்பாகபேசியபோதே இவர் இதை தெரிவித்தார்.
இவர் இது குறித்து மேலும் தெரிவித்தவை வருமாறு
இராணுவத்தின் யாழ்ப்பாண மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சிஎமக்கு உறவினரோ அல்லது தனிப்பட்ட நண்பரோ அல்லர்அவரை நான் நேரில் பார்த்ததுகூடகிடையாதுஆயினும் அவர் யாழ்மாவட்ட கட்டளை தளபதியாக இருந்து அம்மாவட்டமக்களுக்கு ஆற்றி வருகின்ற சேவைகள் குறித்து அறிகின்றபோதெல்லாம் அவர் மீது எமக்குமரியாதைமதிப்பு ஆகியன அதிகரித்து கொண்டே செல்கின்றன.
யுத்தத்துக்கு பின்னர் யாழ்மாவட்ட மக்களின் மனங்களை வெல்கின்ற மனித நேய வேலைதிட்டங்கள் பலவற்றையும் அவருடைய பதவி காலத்தில் முன்னெடுத்து வருகின்றார்யுத்தகாலத்தில் இராணுவத்தால் யாழ்மாவட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கானபரிகாரங்களாகக்கூட அவை இருக்க கூடும்.
அரசியல்வாதிகளால் யாழ்மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பொதுநல வேலைதிட்டங்களை காட்டிலும் அவரால் முன்னெடுக்கப்படுகின்ற பொதுநல வேலை திட்டங்கள் பலமடங்குகள் ஏராளம் ஆகும்தென்னிலங்கையையும்புலம்பெயர் தேசங்களையும் சேர்ந்த மனிதநேய செயற்பாட்டாளர்களிடம் இருந்து நிதி பங்களிப்புகளை பெற்று இம்மாவட்டத்தின் வறியவருமானம் குறைந்த குடும்பங்களின் வாழ்வாதாரம்வாழ்க்கை தரம்பொருளாதாரம்ஆகியவற்றை மேம்படுத்துகின்ற செயல் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்இவருடையகாலத்தில் பொதுமக்களின் ஏராளமான காணிகள் விடுவித்து தரப்பட்டு உள்ளனஅதே போலகீரிமலையில் நல்லிணக்கபுரம் வீட்டு திட்டம் உருவாக்கி கொடுக்கப்பட்டு உள்ளதுஅம்பாறைமாவட்டத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள் இவரின் வழிகாட்டல்அறிவுறுத்தல் ஆகியவற்றுக்குஅமைய யாழ்மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்ற மனித நேய வேலை திட்டங்களைபார்வையிட்டு இவருடைய சேவைகளை பாராட்டி இவருக்கு மகத்தான மனித நேய விருதுவழங்கி கௌரவித்து உள்ளனர்நான் அறிந்த வரையில் எமது நாட்டில் ஊடகவியலாளர்கள்அமைப்பினால் மனித நேய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு உள்ள ஒரேயொரு இராணுவஉயரதிகாரி இவராகத்தான் இருக்க முடியும்.
வருகின்ற மாதம் அளவில் இலங்கை இராணுவத்தின் தளபதியாக புதியவர் ஒருவரை ஜனாதிபதிநியமிக்க வேண்டி உள்ளதுமனித நேயம்மனித உரிமை ஆகியன குறித்து அதிகம்முக்கியத்துவப்படுத்தப்படுகின்ற இக்கால கட்டத்தில் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சிபோன்ற நல்லிணக்க செயற்பாட்டாளர் ஒருவரை ஜனாதிபதி புதிய தளபதியாக நியமித்தல்வேண்டும் என்பது எமது பேரவா ஆகும்இலங்கை இராணுவ தளபதியாக பதவி வகிப்பதற்கானஅத்தனை தகுதிகள்தகைமைகள் ஆகியன மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சிக்கு உள்ளனஎன்பதையும் இத்தருணத்தில் கூறி வைக்கின்றேன்யாழ்மாவட்ட மக்கள் தற்போது இவர்மூலமாக அனுபவித்து வருகின்ற நன்மைகள் நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்என்பது மாத்திரமே எமது எதிர்பார்ப்பு ஆகும்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |