மட்டக்களப்பு, காத்தான்குடியில் உள்ள பள்ளிவாசல் மயானத்தில் இருந்து இன்று காலை ஆயுதங்கள், வெடிபொருள் உட்பட சில பொருட்கள் படையினரால் மீட்கப்பட்டுள்ளன என பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த தேடுதல் நடவடிக்கையானது 231வது படைப்பிரிவின் தளபதியின் வழிகாட்டலில் சிங்கரெஜிமெண்ட் பிரிவால் மேற்கொள்ளப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது.
பள்ளிவாசல் மயானத்திலிருந்து பிஸ்டல் 1, கைக்குண்டுகள் இரண்டு2 , வாள், கைக்கோடாரி, வோக்கிடோக்கி 2, கணினி ஹார்ட் டிஸ்குகள் 3 மற்றும் சீ.டி உட்பட பெருமளவான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
காத்தான்குடி ஜாமியுழ்ழாபீரின் பெரிய மீரா ஜும்மா பள்ளிவாசல் மயானத்தில் இருந்தே இந்த ஆயுதங்களும் வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னர் காத்தான்குடி பகுதியில் தொடர்ச்சியான சோதனைகளை படையினரும் பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையிலேயேபடையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
0 comments: