இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
இந்திய நாடாளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்ற பாரதிய ஜனதாக் கட்சி தலைமையிலான ஆட்சியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொண்டார்.
மோடியின் பதவியேற்பு விழாவில் 8 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், மீண்டும் பிரதமராக பொறுப்பேற்ற மோடியுடன் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று சந்தித்து கலந்துரையாடினார்.
டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று சந்தித்து உரையாடினார்.
இதன்போது, மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட மோடிக்கு மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 comments: