Advertisement

Responsive Advertisement

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடைய நாடாளுமன்ற மொழிபெயர்ப்பாளருக்கு ஏற்பட்டுள்ள நிலை

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நாடா ளுமன்ற மொழிபெயர்ப்பாளரை தடுத்துவைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி குறித்த சந்தேகநபரை 3 மாதங்கள் வரை தடுத்துவைத்து விசாரிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழ ங்கியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றும் கண்டியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments