Advertisement

Responsive Advertisement

பயங்கரவாதிகளின் பாதுகாப்பான 17 வீடுகள் கண்டுபிடிப்பு

இலங்கையின் பல பகுதிகளிலும் தற்கொலை குண்டுதாரிகள் பயன்படுத்தியதாக கூறப்படும் 17 பாதுகாப்பான வீடுகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
கொழும்பு, கல்கிசை, பாணந்துறை, கொச்சிக்கடை மற்றும் வத்தளை பகுதிகளிலேயே குறித்த வீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அதில் கொழும்பில் மட்டும் 3 வீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கடந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து நாடளாவிய ரீதியில் பொலிஸார் விசேட அதிரடி படையினர் மற்றும் முப்படையினர் இணைந்து விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுவந்தனர்.
அந்த வகையில் தற்கொலை குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய 85 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 85 பேரில் 20 பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் 55 பேர் பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டும் வருகின்றனர்.

Post a Comment

0 Comments