Home » » தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை சுற்றிவளைத்துள்ள நூற்றுக்கணக்கான அதிரடி படையினர், இராணுவத்தினர்!

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை சுற்றிவளைத்துள்ள நூற்றுக்கணக்கான அதிரடி படையினர், இராணுவத்தினர்!

தென்கிழக்கு பல்கலைக்கழகம் சுற்றிவளைக்கப்பட்டு, இராணுவம் மற்றும் கடற்படையினரால் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
படையினருக்கு கிடைத்துள்ள இரகசிய தகவலையடுத்து இன்று மாலை 3:45 மணியளவில், அம்பாறை மாவட்டம் ஒலிவில் பகுதியில் அமைந்துள்ள தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் விடுதி, அலுவலக அறைகள் உள்ளிட்ட பகுதிகள் அனைத்திலும் தேடுதலில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நூற்றுக்கணக்கான படையினர் இத் தேடுதலில் பங்கேற்றதுடன், கனகர வாகனங்களும் பல்கலைக்கழக வளாகத்தில் குவிக்கப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராணுவம் மற்றும் அதிரடிப்படையினர் நூற்றுக் கணக்கில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் இறக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர் என்றும், பாதுகாப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இரவு முழுவதும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், நாளை காலை விபரங்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்படும் எனவும் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

ஒலுவிலின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாகச் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |