Home » » நீர்கொழும்பில் இருந்து பெட்டி படுக்கைகளுடன் வெளியேறும் பாக்கிஸ்தானிய குடும்பங்கள்! மனதை உருக்கும் காட்சி!!

நீர்கொழும்பில் இருந்து பெட்டி படுக்கைகளுடன் வெளியேறும் பாக்கிஸ்தானிய குடும்பங்கள்! மனதை உருக்கும் காட்சி!!

ஸ்ரீலங்காவில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புக்களை அடுத்து உயிர் அச்சுறுத்தல் காரணமாக பொலிஸாரிடம் தஞ்சம் கோரிய முஸ்லீம் மற்றும் கத்தோலிக்க மக்கள் தொடர்ந்தும் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த மக்களை நீர்கொழும்பு அல்-ஹிலால் மத்திய கல்லூரியில் தற்காலிகமாக தங்க வைக்கப்பதற்கு பொலிஸார் முற்பட்ட போது அப்பிரதேச முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அவர்கள் மீண்டும் பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்காவில் நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களை அடுத்து நீர்கொழும்பில் தங்க வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முஸ்லீம் மற்றும் கத்தோலிக்க மக்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுவிக்கப்பட்டிருந்தது.
இந்த அச்சுறுத்தலை அடுத்து கடந்த 24 ஆம் திகதி நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் அவர்கள் பாதுகாப்புத் தேடி தஞ்சம் கோரியிருந்தனர்.
பாகிஸ்தானைச் சேர்ந்த 60 கத்தோலிக்கர்களும் 38 முஸ்லிம்களும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 57 பேருமாக ஆண்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என 155 பேர் இவர்களில் அடங்குகின்றனர்.
இவர்கள் அனைவரும் கடந்த 24 அம் திகதி கொழும்பில் உள்ள விடுதி ஒன்றில் தங்க வைக்கப்படுவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கு ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாக மீண்டும் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
அடுத்த நாள் கடுவெல அத்துருகிரிய பிரதேசத்தில் உள்ள நிலையம் ஒன்றுக்கு ஆண்களும் மொரட்டுவ சர்வோதய நிலையத்திற்கு பெண்கள் மற்றும் சிறுவர்களும் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கு ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாக மீண்டும் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த நிலையில் இவர்களை நீர்கொழும்பு அல்-ஹிலால் மத்திய கல்லூரியில் தற்காலிகமாக தங்க வைக்கப்படுவதற்கு நேற்று ஞயிற்றுக்கிழமை பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
பிரதேச கத்தோலிக்க மக்களுடன் முரண்பட முடியாதென தெரிவித்து, வெளிநாட்டு அகதிகளை அல்-ஹிலால் மத்திய கல்லூரியில் தங்க வைப்பதற்கு அப் பிரதேச முஸ்லீம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் மீண்டும் இந்த மக்கள் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு திருப்பி அழைத்துச்செல்லப்பட்டதாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்தார்.
தாம் தொடர்ந்தும் பல இடங்களுக்கு சென்ற போதிலும் யாரும் தமக்கு ஆதரவு வழங்க முன்வரவில்லை என அவர்கள் கவலை வெளியிட்டனர்.
ஷஹரியா - பாக்கிஸ்தானிய கத்தோலிக்கர்,
என்னுடைய பெயர் ஷஹரியா. நான் கத்தோலிக்க சமூகத்தைச் சேர்ந்தவன். இங்கு நாங்கள் எங்கு செல்தென்று எங்களுக்கு தெரியவில்லை. இந்த கிழமை நாங்கள் ஒவ்வொரு நாளும் கண்டி சென்றோம், நுவரெலியா சென்றோம், மொறட்டுவ சென்றோம் ஆனால் இரவில் பொலிஸ் நிலையத்தில் உள்ளோம். இன்று பெரியமுல்லையிலுள்ள பாடசாலைக்கு செல்லுமாறு பொலிஸ் அதிகாரி தெரிவித்தார். அங்கு நாங்கள் சென்றோம். ஆனால் அங்குள்ளவர்கள் அனைவரும் எங்களை எதிர்ததால் மீண்டும் பொலிஸ் நிலையத்திற்கு திரும்பியுள்ளோம்.
எங்களுடைய வீட்டு உரிமையாளர் வீட்டிலிருந்து எங்களை அனுப்பிவிட்டார். இப்போது எங்களுக்கு எங்கும் செல்வதற்கு வழியில்லை. நாங்கள் இப்போது பொலிஸ் நிலையத்தில் தங்கியுள்ளோம். இது மிகவும் கடினமான சூழ்நிலையாக எங்களுக்கு இருக்கின்றது. 6 நாட்கள் நாங்கள் இங்கு இருக்கின்றோம். நாங்கள் இங்கு பல பிரச்சனைகளை சந்தித்துள்ளோம்.
எனது பெயர் ஜொசுவா. நான் ஒரு கத்தோலிக்கர். எங்களுக்கு பல பிரச்சனைகள் உள்ளன. நாங்கள் பல இடங்களுக்கு சென்றோம். யாரும் எங்களை அனுமதிக்கவில்லை.
ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் மூலம் ஸ்ரீலங்காவில் தாம் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் இந்த மக்கள், தமக்கு உணவோ ஏனைய உதவிகளோ தேவையில்லை எனவும் மனிதாபிமானத்துடன் தாம் பாதுகாப்பாக தங்குவதற்கு இடமளிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |