Home » » அமெரிக்க அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த இலங்கை நாய்! நட்சத்திர ஹோட்டலுக்குள் சிக்கிய வெடிபொருள்

அமெரிக்க அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த இலங்கை நாய்! நட்சத்திர ஹோட்டலுக்குள் சிக்கிய வெடிபொருள்


இலங்கையில் நடந்த தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் காரணமாக ஒட்டுமொத்த நாடும் பெரும் பீதியில் மூழ்கியுள்ளது.
தலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டுகள் இருப்பதாக தீவிர சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
பல இடங்களில் வெடிகுண்டுகள் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலான குண்டுகளை இராணுவத்தின் K-9 விசேட பிரிவின் மோப்ப நாயான 'பிராங்க்' மோப்பம் பிடித்து கண்டுபிடித்துள்ளது.
இலங்கை பொலிஸாருடன் இணைந்து சிறப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அமெரிக்க புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இந்த நாயின் செயற்பாடு குறித்து வியப்பு அடைந்துள்ளனர்.
மனிதர்களை விடவும் மிகவும் அபாரமான முறையில் குண்டுகளை இனங்கண்டுபிடித்துள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளனர்.
அதேவேளை அமெரிக்க வெடிபொருள் நிபுணர் ஒருவரின் பொதியில் வெடிபொருள் இருந்தமை குறித்து மோப்ப நாய் கண்டுபிடித்துள்ளது.
கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல்கள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது அமெரிக்க வெடிபொருள் நிபுணர் ஒருவரின் அறையை மோப்பநாயான 'பிராங்க்' மோப்பம் பிடித்துள்ளது.
குண்டுவெடிப்பு விசாரணைகளுக்கு உதவுவதற்காக அமெரிக்க நிபுணர் வந்திருந்தார். அவரது அறையில் இருந்த இயந்திரம் ஒன்றில் சிறிதளவு வெடிபொருள் இருந்தமையினால், அதை மோப்பம் பிடித்தே பிராங்க் குறித்த அறையை அடையாளம் காட்டியுள்ளது.
இதன்போது குறித்த அமெரிக்க நிபுணர் வெளியில் சென்றிருந்ததால் அமெரிக்க தூதரகத்தைத் தொடர்பு கொண்டு குறித்த அதிகாரி வரவழைக்கப்பட்டுள்ளார்.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் சிறிதளவு வெடிபொருள் ஒட்டிக்கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மோப்ப நாயின் அபார திறமை குறித்து அமெரிக்க அதிகாிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |