Home » » மட்/ பட்டிருப்பு தேசிய பாடசாலையில் நடைபெற்ற க.பொ.த (சா/த) பரீட்சையில் 9A தரத்தைப் பெற்ற மாணவர்களை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு

மட்/ பட்டிருப்பு தேசிய பாடசாலையில் நடைபெற்ற க.பொ.த (சா/த) பரீட்சையில் 9A தரத்தைப் பெற்ற மாணவர்களை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு

( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
அண்மையில் வெளியிடப்பட்ட கல்விப் பொதுத்தராதர சாதாரணப் பரீட்சை முடிவுகளின் படி மட் பட்  பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடி  மாணவர்கள் 10 பேர் சகல பாடங்களிலும் அதி திறமைச் சித்தி பெற்று மற்றுமொரு சாதனை படைத்துள்ளனர்.
கோகிலன் சஞ்ஜித் , நிமலநாதன் பபிலோசன் , மேகநாதன் கஜவதனன் , தவேந்திரன் மிதுரங்கள் , வரதராஜன் சித்தாசன் , சத்தியமோகன் துசாரகேஸ் , நடேசன் கிருத்திகரன் , குணவர்த்தன அபிலாசனன் , யோகேஸ்வரன் சஜீவன் , அருள்ராஜ் சுஜிந்த ஆகிய  10 மாணவர்கள் 9 பாடங்களிலும் ” ஏ ” சித்தியினையும் 4 மாணவர்கள் 8 பாடங்களில் ” ஏ ” சித்தியினையும்  4 மாணவர்கள் 7 பாடங்களில் ” ஏ ” சித்தியினையும் பெற்றுள்ளதுடன் பரீட்சைக்கு தோற்றிய 185 மாணவர்களுள் 155 மாணவர்கள் க.பொ.த.உயர்தரத்தில் கல்வி பயில்வதற்கு தகுதியும் பெற்றுள்ளனர்.

சித்தியடைந்து பாடசாலைக்கும் , பட்டிருப்பு கல்வி வலயத்திற்கும் , கற்பித்த ஆசிரியர்களுக்கும் , பெற்றோருக்கும் பெருமை சேர்த்த மாணவர்களையும் கற்பித்த ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று  ( 4 )  பாடசாலை திறந்தவெளியரங்கில் பாடசாலை அதிபர் கே.தம்பிராஜா தலைமையில் இடம்பெற்றது.







இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர்கள் , ஆசிரியர்கள் , கல்விசாரா உத்தியோஸ்தர்கள் , மாணவர்கள் , பாடசாலை அபிவிருத்தி சபை செயலாளர் கே.யோகநாதன்  , பாடசாலை பழைய மாணவர் சங்க செயலாளர் ஐங்கரன் தவலிங்கம் உட்பட பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
கல்விப் பொதுத்தராதர சாதாரணப் பரீட்சையில் சித்தியடைய தவறிய மாணவர்கள் கல்லூரியில் நடத்தப்படும் 13  வருட உத்தரவாத கல்வித்திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக பாடசாலை அதிபர் கே. தம்பிராஜா தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |